Thursday, October 28, 2010

ஈழம்...

புலம் பெயர்ந்த எங்கள் வாழ்வு
நிலம் மறந்தல்ல....
களம் இழந்த எங்கள் பயணம்
வளம் பெற்று... நலம் பெற்று...
நிலம் மீட்கும் நாளை நோக்கி...

தம்பி போனாரா -
இருந்தென்ன..
இளம் தம்பிகள் எங்கும் உளமே...

அண்ணன் வருவாரா???
அவர் எங்கே போனார்...
எங்களுடனேயே....

கன்னிநிலம் மீட்க..
காணி நிலம் காக்க...
வன்னிக்காடு விட்டு
வளைகுடா வந்தோமே...

வயல் காடு..சாக்காடு ஆச்சி..
அயல் நாடு .. ஆதரவாச்சி...
ஈழம் மீட்கும்வரை...
பாரம் சுமப்போமே..

வேதனையுடன்...
இனியஹாஜி