புலம் பெயர்ந்த எங்கள் வாழ்வு
நிலம் மறந்தல்ல....
களம் இழந்த எங்கள் பயணம்
வளம் பெற்று... நலம் பெற்று...
நிலம் மீட்கும் நாளை நோக்கி...
தம்பி போனாரா -
இருந்தென்ன..
இளம் தம்பிகள் எங்கும் உளமே...
அண்ணன் வருவாரா???
அவர் எங்கே போனார்...
எங்களுடனேயே....
கன்னிநிலம் மீட்க..
காணி நிலம் காக்க...
வன்னிக்காடு விட்டு
வளைகுடா வந்தோமே...
வயல் காடு..சாக்காடு ஆச்சி..
அயல் நாடு .. ஆதரவாச்சி...
ஈழம் மீட்கும்வரை...
பாரம் சுமப்போமே..
வேதனையுடன்...
இனியஹாஜி
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Thursday, October 28, 2010
Wednesday, October 21, 2009
தமிழ் மண்ணே வாழ்க!

தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!
தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!
ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...
யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!
மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா - தம்பி
உழைத்தால் உயர்வுடா...!
உண்மை பேசுடா - அதில்
நன்மை இருக்குடா...
வாய்மை வெல்லவே - நீ
வாழ்ந்து காட்டடா...!
பெண்மை போற்றடா - அவர் நம்
அன்னையர் அல்லவா!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்
இணைய வேண்டுமல்லவா...!
ஆசை அடக்கவே - கொஞ்சம்
அறிவைக் கூட்டடா!
வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!
உலகம் முழுவதும்
வாழும் நம் உறவுகள்...
வானம்பாடி போல்
விரிக்கட்டும் நம் சிறகுகள்...

தமிழன்புடன்,
இனியஹாஜி, தோஹா - கத்தார்.
நாள்: 21 - 10 - 2009
Subscribe to:
Comments (Atom)
