Showing posts with label கவிக்கோ.அப்துல் ரஹ்மான். Show all posts
Showing posts with label கவிக்கோ.அப்துல் ரஹ்மான். Show all posts

Sunday, November 30, 2008

கவிக்கோவை (அப்துல் ரஹ்மானை) க் கண்டேன்!



அறிஞரைக் கண்டேன்
அகமகிழ்ந்து நின்றேன்!
கவிக்கோவைக் கண்டேன்
பெருமகிழ்வு கொண்டேன்!

அன்பைத் தந்தேன் - அவர்
அறிவைத் தந்தார்...
நட்பைத் தந்தார்...
நெஞ்சில் நிலைத்து நின்றார்!

இந்த
கவிக்கோவிடம் பாடம் கற்க
கவிஞர்களின் தொடர் வரிசை
தினம் தினம்...
தொடர்ந்து கொண்டிருக்கிறது!

அரசியல் களத்தில்
அவரில்லை என்றாலும்
அரசியல் சக்தி
அவரையும் சுற்றி இருக்கிறது!

ஏழு அதிசயங்களைப் பற்றி
கேள்விப் பட்டுள்ளேன்!
எட்டாவது அதிசயத்தை - அவரது
ஆறாவது விரலில் பார்த்தேன்!!!

- சென்னை, 21 - 09 - 2000