Thursday, June 19, 2008

மனம்

நான்
வாழ்வில் சில பொழுதில்
வீழ்ந்து விடுகின்ற பொழுது
சிரிக்கின்றது சிலரது மனம்
ஏளனத்துடன்..
சிறகொடிந்த பறவையாகிவிட்டேனென...

அடுத்த பொழுதில் ‍மீண்டும் நான்
சிரமம் தவிர்த்து..
சிலிர்த்தெழும் பொழுது
சந்தோசப் படுவதாக‌
காட்டுதலுடன் அவர்கள்...

எல்லா நிலையிலும் என்னுள்
அணையாமல் எரியும் நெருப்பின்
ஆழம் அறியா அவர்களை நினைத்து
தினமும் சிரிக்கிறது என் மனம்...

No comments: