Wednesday, October 21, 2009

தமிழ் மண்ணே வாழ்க!




தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!

தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!

ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...


யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!

மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா - தம்பி
உழைத்தால் உயர்வுடா...!

உண்மை பேசுடா - அதில்
நன்மை இருக்குடா...
வாய்மை வெல்லவே - நீ
வாழ்ந்து காட்டடா...!

பெண்மை போற்றடா - அவர் நம்
அன்னையர் அல்லவா!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்
இணைய வேண்டுமல்லவா...!

ஆசை அடக்கவே - கொஞ்சம்
அறிவைக் கூட்டடா!
வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!

உலகம் முழுவதும்
வாழும் நம் உறவுகள்...
வானம்பாடி போல்
விரிக்கட்டும் நம் சிறகுகள்...



தமிழன்புடன்,
இனியஹாஜி, தோஹா - கத்தார்.
நாள்: 21 - 10 - 2009

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in