Saturday, November 8, 2008

என்னுரை!




என் அன்பின் சொந்தங்களே!

எல்லா வளமும் பெற்று
எல்லோரும் வாழ வாழ்த்துகிறேன்!

நான்
இலக்கியம் தெரியாதவன்..
இலக்கணம் பயிலாதவன்..
எதுகை, மோனை என
எதுவுமே அறியாதவன்..!

ஆனால்
உண்மை பேசுவதிலும்
நன்மைகள் செய்வதிலும்..
நேர்மையாய் நிற்பதிலும்..
வாய்மையோடு வாழ்வதிலும்..
எளிமையாய்.. பொறுமையாய்..
இருப்பதில் தனித்து நிற்கின்றேன்..!

இறைவனுக்கல்லாது..வேறு
யாருக்கும்..எதற்கும் அஞ்சிடாது...
துஞ்சிடாது.. துயர்ந்திடாது..
இறைத்தொண்டனாய் இருக்கிறேன்..!

நான் யார் என்பதை..
என்னால் எது முடியுமென்பதை
அறிந்து கொண்டதால்..
அறிஞனாக முயல்கிறேன்..!

அருள் மறையாம் திருமறையின்
அண்ணல் நபி வழிமுறையின் படி
பகுத்தறிவாளர் பெரியாரின்
பெருந் தொண்டனாய் வாழ்கிறேன்..!

வாழ்வினை அணுவணுவாய் இரசித்து
இயற்கையாய் வாழ்கிறேன்..
இயல்பாய் வாழ்கிறேன்..
இஸ்லாமியனாய் வாழ்கிறேன்..!

தோழர்களே! - நான்..
சாமானியன்..
சமரசங்களுக்கு
கட்டுப்படாதவன்..!

நான் போராளி..
போர்க்கோலத்துடனேயே..
மரக்கலத்திலும்..
விண் கலத்திலும்..
கார் நிலத்திலும் வாழ்பவன்..!

நான் ஏகலைவன்..
எவருக்கும்
என் கட்டைவிரலைத்
தரமாட்டேன்..!

என்னைப் படியுங்கள்..
பிழையிருந்தால் பதியுங்கள்...!

மாறாத அன்புடன்,
இனியஹாஜி

No comments: