Tuesday, November 11, 2008

மழையா மனிதனா



விடியல் பொழுதில்
வயல்வெளி சென்றேன்..
பசும் பயிர் காய்ந்து
பாளம் பாளமாய்...
மனசும் தான்..!

மண்ணும் மழையும்
மாறிய காரணம்..??
மனிதன் தான்..!!

கட்சிகளுக்கும்
ஆட்சிகளுக்கு மிடையாயான
நீயா.. நானா.. போட்டியில்
காவிரி நீர் வரவில்லை...
மாறாக...
கண்களிலிருந்து
ஊற்றுக்கண்...!

அட.. அடடா..
ஊருக்கே
உணவு தந்தவன்
உணவுத் தட்டுடன்...
கஞ்சித் தொட்டிக்கு முன்பே
உணர்வு இழந்தவனாக...!

மழையே... மழையே...
மனிதன் தவறு செய்தான்
மன்னிப்பாயாக...

மண்ணை முத்தமிட
மறவாமல் வருவாயா??
ஏழைகளாகிய எங்களின்
மனங்களை மகிழச்செய்வாயா???

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: ஆயங்குடி - 2002

No comments: