Tuesday, November 11, 2008

மனிதா மனிதா



மனிதா.. நீ...
மாறுவ தெப்போது?

மதமென்ற பெயரால்
மிருக வெறியோடு
மாற்றானின்
மதத்தையா அழிக்கிறாய்?
மனிதர்களை..
மனிதப் புனிதர்களை...

நீ இந்த
மண்ணுக்கு மண்ணனாகி
மகிழ்வதற்கு - நாளும்
மண்ணின் மைந்தரல்லவா
மடிகின்றார்...!

இனம்.. மதமென்று
இனம் பிரித்துப் பாராது
இந்தியனாய்ப் பார்...
இன்னும் மேலே
மனிதனென்றே பார்...!

மழையைப் பார்..
மலரைப் பார்..
காற்றைப் பார்..
கடலைப் பார்..
விண்ணைப் பார்..
மண்ணைப் பார்..
இறைவன் படைப்பின்
இரகசியம் பார்..!!

வெடி குண்டும் அணு குண்டும்
வேண்டாமே நமக்கு...
அன்பு போதும் - அதனால்
அகிலத்தையே வெல்லலாம்!!!

- கோவைக் கலவத்தின் போது எழுதியது.

No comments: